search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீர் பாட்டிலால் தாக்குதல்"

    • ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது.
    • மாமியாரிடம் உங்கள் மகளை என்னுடன் சேர்ந்து வாழ அனுப்புமாறு கூறினர்.

    கோவை,

    கோவை ஆனைமலை அருகே சமத்தூரை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். கூலி தொழிலாளி.

    இவருடைய இளைய மகளை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த குமார் (33) என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.

    இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த இவரது மனைவி 15 நாட்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று ஆனந்த குமார் குடிபோதையில் அவரது மனைவி வீட்டிற்கு சென்றார்.

    அங்கு ஆனந்தகு மாரின் மனைவி மற்றும் மாமியார் இருந்தனர். இதையடுத்து ஆனந்தகுமார் மாமியாரிடம் உங்கள் மகளை என்னுடன் சேர்ந்து வாழ அனுப்புங்கள் என கூறினர்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, ஆனந்தகுமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து தப்பிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் கத்தினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து அவர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ஆனந்த குமாரை தேடி வருகின்றனர்.

    • பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகேயுள்ள ஆ.புதுப்பா ளையத்தை சேர்ந்த நவநீதன் (வயது 36). இவர் நேற்று மதியம் ஆப்பக்கூடல் அரசு மதுபானக கடையில் மது வாங்கிக்கொண்டு அருகே உள்ள காலி இடத்தில் உட்கார்ந்து மது குடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

    அப்போது, அங்கு வந்த கூத்தம்பூண்டி அண்ணாநகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 31) என்பவர் இவரின் காலை மிதித்து உள்ளார். இதனை தட்டி கேட்ட நவநீதனிடம் மாரிமுத்து தகராறில் ஈடுபட்டு, கீழே கிடந்த பீர் பாட்டிலால் நவநீதனை தாக்கியதோடு பீர் பாட்டிலால் குத்தி கொன்று விட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் நவநீதனுக்கு நெற்றி மற்றும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் நவநீதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×